வாலிபருடன் வீட்டை விட்டு ஓடிய அக்கா தங்கை : சிறுமிகளின் செயலால் அதிர்ச்சியில் பெற்றோர்!!

312

மகாராஷ்டிரா…..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஹட்கோபுர் பகுதியை சேர்ந்த 17 வயது மற்றும் 16 வயது அக்கா- தங்கைகளுக்கு அவர்களின் பெற்றோர் இரு இளைஞர்களுக்கு திருமணம் செய்துவைக்க திட்டமிட்டனர்.

இந்த திருமணத்திற்கு அக்கா- தங்கையான சிறுமிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிறுமிகளின் எதிர்ப்பையும் மீறி திருமணம் ஏற்பாடுகளை சிறுமிகளின் பெற்றோர் செய்து வந்தனர்.

இதனால், தங்கள் வீடு இருக்கும் பகுதியில் வசித்து வந்த 21-வயதான வேறொரு இளைஞனுடன் சிறுமிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இது குறித்து சிறுமிகளின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமிகளை கடத்தி சென்றதாக 21-வயது இளைஞன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் பல்வேறு நகரங்களுக்கு சென்ற சிறுமிகள் இருவரும் 6 நாட்களுக்கு பின் இன்று வீடு திரும்பினர். சிறுமிகளுடன் சென்ற 21 வயது இளைஞனும் திரும்பி வந்தார்.

இதனை தொடர்ந்து சிறுமிகளை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் அந்த இளைஞன் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.