நாட்டுப்புறப் பாடலில் மக்கள் மனதைக் கவர்ந்த கிராமத்து ஜோடி கிளிகள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி தம்பதி.பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருவரும் இணைந்து பாடத் தொடங்கினார்.
பிறகு, இருவரையும் தனித் தனியாக பிரித்து இரண்டு குழுக்களில் சேர்த்தனர். என்னதான் தனித் தனியாக போட்டியிட்டாலும், ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.
இவர்களின் காதல் வாழ்க்கையும் அப்படிதான் என்று அவர்களே தெரிவித்துள்ளனர். இந்த வெற்றி இவர்களின் காதல் திருமணத்திற்கு கிடைத்த அங்கிகாரம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.