அக்காவை கல்லால் அடித்து கொடூரமாக கொன்ற தம்பி : வெளியான திடுக்கிடும் காரணம்!!

627

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் பண நெருக்கடியால் சொந்த அக்காவையே தம்பி ஒருவர் கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை நெசவாளர் காலனியை சேர்ந்தவர் 24 வயதான தனசேகரன். இவரது அக்கா முறை உறவினர் சிந்து.

இந்த நிலையில் சிந்துவின் கணவர் ஆறுமுகம் தனசேகரிடம் குடும்ப செலவிற்கு ஐந்தாயிரம் பணம் கேட்டுள்ளார். பணம் தருவதாக கூறிய தனசேகர், யாரேனும் ஒருவர் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார்.

ஆறுமுகம் வேலையில் இருப்பதால் தனது மனைவி சிந்துவை அழைத்துச் செல்லுமாறு தனசேகரிடம் கூறியுள்ளார்.

மாலை சுமார் 3 மணிக்கு ஆறுமுகத்தை சந்தித்த தனசேகரன் பணம் ஐந்தாயிரத்தை கொடுத்து விட்டு அக்காவை பனியம்பள்ளி என்ற இடத்தில் பேருந்தில் ஏற்றி விட்டேன் என சொல்லியிருக்கிறார்.

ஆனால் தனது மனைவி சிந்துவின் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததோடு அவர் வீட்டுக்கும் வரவில்லை.

இரவாகியும் வீடு வந்து சேராததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தனசேகரனை விசாரித்துள்ளனர். அவர் குடிபோதையில் இருந்ததோடு முன்னுக்கு பின் முரணாக பேச சந்தேகமடைந்த அவர்கள் தனசேகரனை சென்னிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பொலிசார் விசாரித்த போது, ஐந்து பவுன் நகைக்காக சிந்துவை கொன்று ஊத்துக்குளி அருகே உள்ள வனப்பகுதியில் பிணத்தை மறைத்து வைத்துள்ளதாக கூறியிருக்கிறார்.

மேலும் தனசேகரனை விசாரித்தபோது, எனக்கு சரியான வேலை இல்லாததால் பண நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் ஆறுமுகம் பணம் கேட்டார்.

அதனால் ஒருவர் வட்டிக்கு பணம் கொடுப்பதாக அவளை பைக்கில் அழைத்து சென்றேன். அவள் கழுத்தில் இருந்த நகையை பார்த்ததும் என் மனது மாறியது.

விஜயமங்கலம் ரயில் நிலையம் அருகே சென்ற போது அங்கிருந்த வனப்பகுதியில் சென்றேன். அப்போது பைக்கில் இருந்து இறங்கிய சிந்து இங்கே எதற்காக என்னை அழைத்து வந்தாய் என தகராறு செய்தாள்.

அப்போது அங்கே கிடந்த கல்லை எடுத்து சிந்துவின் மண்டையில் அடித்தேன். அவள் மயங்கினாள் அப்போதும் அவள் உயிர் போகாததால், சிந்துவின் முந்தானையை எடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் அவள் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தாலிக்கொடியை கழட்டி வந்து எனது உறவினர் பெயரில் தனியார் வங்கியில் 60 ஆயிரத்திற்கு அடமானம் வைத்தேன்.

பின்னர் அதே பணத்தில் ஐந்தாயிரத்தை சிந்துவின் கணவரிடம் கொடுத்தேன். பின்னர் எனக்கிருந்த கடன்களை முழுவதும் அடைத்தேன். சிந்துவின் கணவரிடம், சிந்து பஸ் ஏறி வீட்டிற்கு போய்விட்டதாக பொய் சொன்னேன்.

எனக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் தான் கொலை செய்தேன் என விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளான்.