பெண் மருத்துவர் தற்கொலை

மும்பையில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துவிட்டு பொலிஸ் வருவதற்கு முன்பே தரையில் இறக்கியிருப்பதாக அவருடைய கணவர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவியும், மருத்துவருமான பயல் தத்வி (26) கடந்த 22ம் திகதியன்று விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பயல் மீது அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஹேமா அஹுஜா (28), பக்தி மேஹெர் (26), அங்கிதா கந்தல்வால் (27) என்கிற மூன்று பேர் சாதி ரீதியிலான தாக்குதல் நடத்தியதே தற்கொலைக்கான காரணம் என பயல் தத்விவின் தாய் பொலிஸாரிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவமானது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பேருடன் சேர்த்து, நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திய மருத்துவ நிர்வாகத்தினரையும் கைது செய்ய வேண்டும் என போராட்டம் வெடிக்க ஆரம்பித்தது.

இந்த நிலையில் பயல் தத்விவியின் கணவர் சல்மான், பொலிஸார் வருவதற்கு முன்னதாகவே பயலின் உடலை மூன்று பேரும் சேர்ந்து கயிற்றிலிருந்து தரையில் இறங்கியதாக கூறியுள்ளனர். இது சந்தேகத்தை ஏற்படுத்துக்கிறது.

என்னுடைய மனைவி தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை. அந்த மூன்று பெண்களும் சேர்ந்து தான் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று மூன்று பெண்களும் பயலின் அறையிலிருந்து வெளியில் வந்து கதவை தட்டிக்கொண்டிருந்துள்ளனர். பயல் விடுதியில் இருந்து அவர்களின் விடுதி வேறுபட்ட இடத்தில் இருக்கும் பொழுது எதற்காக அந்த இடத்திற்கு அவர்கள் வந்தார்கள் என கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த விவகாரமானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பேரில் பக்தி மேஹெர் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.