உடலில் துப்பாக்கி குண்டுகளுடன் இறந்து கிடந்த இளம்காதல் ஜோடி!!

711

இளம்காதல் ஜோடி

பீகார் மாநில சட்டமன்ற உறுப்பினரின் தம்பி மகள், ஆண் நண்பருடன் ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தள சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரக்கூடிய விஜய் குமார் என்பவரின் தம்பி மகள் ரியா, நேற்றைய தினம் ஆண் நண்பருடன் இ றந்து கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், ரியா மற்றும் ஆசிப் என்கிற அவருடைய ஆண் நண்பர் துப்பாக்கி தோட்டா பாய்ந்து இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் இருவரின் உ டல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

ரியா ராஜஸ்தானில் படித்துக்கொண்டிருந்த போது 25 வயதான ஆசிப் என்கிற இளைஞரின் நட்பு கிடைத்துள்ளது. இருவரும் நண்பர்களாகவே பழகி வந்துள்ளனர். இதுகுறித்து ரியாவும் தன்னுடைய அம்மாவிடம் கூறியிருந்துள்ளார்.

அங்கு படிப்பை முடிந்த பின்பு ரியா டெல்லியில் சொந்த வீட்டிற்கு வந்துவிட்டார். கடந்த 9ம் திகதியன்று உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ஆசிப் வருகை தந்துள்ளார்.

இதனை அறிந்த ரியா, நேற்று இரவு 7 மணியளவில் நண்பரை வீட்டிற்கு அழைத்து வர செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவருடைய தாய், செல்போனுக்கு முயற்சித்துள்ளார்.

பின்னர் சில இடங்களில் தேடிபார்த்துவிட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அப்போது தான் இருவரும் ச டலமாக கிடப்பதை பொலிஸார் கண்டறிந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை த ற்கொ லை என காவல்துறை கண்காணிப்பாளர் சந்தேகம் தெரிவித்துள்ளார். ஆசிப் முதலில் ரியாவின் தலையில் துப்பாக்கியால் சு ட்டுக்கொ லை செய்துள்ளார். அதன்பிறகு ஆசிப் த ற்கொ லை செய்துள்ளார்.

இதுதொடர்பகா ஆசிப்பின் நண்பர் டேனிஷ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் தான் ஆசிஃபுக்கு கைத்துப்பாக்கி வழங்கியதாக கூறப்படுகிறது. இறந்தவரின் இரண்டு சுற்று புல்லட் மற்றும் மொபைல் போன்கள் (ரியா மற்றும் ஆசிப்) டேனிஷிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

த ற்கொ லைக்கு சாத்தியமான காரணம் தோல்வியுற்ற காதல் விவகாரமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.