தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட பிரதீபா, தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர் பிரதீபா. இவர், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட விரக்தியால் தற்கொலை செய்துகொண்டார்.
12ஆம் வகுப்பில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்த பிரதீபா, நீட் தேர்வில் 39 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததால் இந்த விபரீத முடிவை எடுத்தார்.
இந்நிலையில், பிரதீபா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர், அவரின் தந்தைக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், ‘உங்க அம்மு உங்ககிட்ட சொல்ல விரும்புவது, இதுவே கடைசி பா. Sorry பா. என்னால் ஜெயிக்க முடியவில்லை. நீ என் மேல வச்சிருந்த நம்பிக்கையை என்னால காப்பாற்ற முடியவில்லை.
திரும்பவும் ஒரு தோல்வியை தாங்கும் சக்தி இல்லை. எத்தனை முறைப்பா நான் தோல்வியைத் தாங்குவேன். தோல்வியடைந்ததாலே என்னாலே என் School-க்கு போக முடியல. என் Teacher-ஐ பார்த்து பேசுற தைரியம் இல்லை.
என்னால் தான் அப்பா மற்றவர்கள் முன்னால இரண்டு வருஷமா தலைகுனிந்து வாழ்ந்திங்க. என் ஆசை நீ மத்தவங்க முன்னாடி தலை நிமிர்ந்து வாழணும். ஆனால், என்னால் அதைச் செய்ய முடியல. என் குடும்பம், நீங்கள் எல்லாம் எனக்குக் கிடைத்த வரம் பா. நான் உங்களுக்கு கிடைச்சது சாபம் என்று நினைக்கிறேன்.
எனக்கு தோல்வியைத் தாங்குற சக்தி இல்லை. இந்த 2 வருஷமா இந்த சக்தியைக் கொடுத்தது நீ தான் பா. ஆனால், இதுக்கு மேலயும் உனக்கு பாரம் ஆக இருக்க நான் விரும்பவில்லை. இந்த முடிவை நான் 2 வருஷத்துக்கு முன்னாடி எடுத்தப்போதே நீ என்ன தடுக்காமல் இருந்திருக்கலாம்.
அப்படி நான் செய்திருந்தால் 2 வருஷத்துல என்னை கொஞ்ச கொஞ்சமாக மறந்திட்டு இருப்பீங்க. அதனால், நான் இப்போது அதை செய்யப் போகிறேன். ஏன் என்றால் நான் உங்க எல்லாருடைய நம்பிக்கையையும் இழந்து நான் சாகப்போறேன்.
Sorry பா. I love you அப்பா. எனக்கு வேற வழி தெரியவில்லை அப்பா. நம்ம குடும்பம் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க எல்லாருடனும் ரொம்ப நாள் சேர்ந்து வாழணும்னு ஆசையா இருக்கு.
ஆனால், எனக்கு அந்த தகுதி இல்லை. இந்த முடிவு மற்றவர்களுக்கு கோழைத்தனமா தெரியலாம். ஆனால், அடுத்தவர்கள் நம்ம மேல வெச்ச நம்பிக்கையை அழிச்சுட்டு வாழுறதை விட இந்த முடிவே மேல்.
எனக்கு ஒரே ஒரு வருத்தம் பா. என்னால் உங்களுக்கு சந்தோஷமும் தர முடியவில்லை. என்னால் எல்லா சந்தோஷத்தையும் இழந்துவிட்டீர்கள். அப்பா நீங்க எனக்கு தைரியம் கொடுத்த பிறகும் நான் இந்த முடிவு எடுக்கறது தப்பு தான்.
ஆனால், என்னால் தோல்வியை தாங்க முடியவில்லை. உங்க எல்லோரையும் விட்டுட்டுப் போகணும்னு நினைக்கும்போது ரொம்ப வலிக்கிறது. ஆனால், அதைவிட அதிகமான வலியை இந்தத் தோல்வி தந்துவிட்டது.
என்னால் மற்றவர்கள் மாதிரி கிடைத்ததை வைத்து வாழ முடியவில்லை. ஏன் என்றால் நான் அப்படி வளரவில்லை. அந்த வலியை என்னால் தாங்க முடியாது. என்னை மன்னிச்சிடுங்க அம்மா, மன்னிச்சிடுங்க அக்கா, மன்னிச்சிடுங்க அண்ணா… உங்கள் எல்லோரையும் Miss பண்றேன். I Love My Family.. But my Failure going to me deadline.. Sorry.. உங்க அம்மு’ என எழுதியுள்ளார்.