என் மனைவி இப்படி செஞ்சிட்டாளே : வாழ்க்கையை முடித்து கொண்ட கணவனின் சோகம்!!

709

இந்தியாவின் தெலுங்கானாவில் திருமணமான இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோடூகுனுரு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசுப்பா ரெட்டி (32). இவருக்கும் சுவர்ணலதா என்ற பெண்ணுக்கும் ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தனது கிராமத்துக்கு வந்த ரெட்டி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், ரெட்டிக்கும் அவர் மனைவி சுவர்ணலதாவுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டதன் காரணமாக இருவரும் சில காலமாக பிரிந்து வாழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

மனைவி தன்னை தவிக்கவிட்டு பிரிந்து சென்றுவிட்டாளே என மன வேதனையில் இருந்த ரெட்டி தற்கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.