உத்திரபிரதேசத்தில் திருமணமான பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் முன்னாள் காதலன் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளான்.இதனால் பொறுமையை இழந்த இளம்பெண் முன்னாள் காதலனின் நாக்கை துண்டித்து விட்டார்.
இளம்பெண் வெட்டி வீசிய நாக்கை கீழே இருந்து எடுத்து கொண்டு ஓடி விட்டான். சம்பவம் குறித்து தகவளறிந்த பாதிக்கபட்டவரின் தாயார் அந்த இளம்பெண் வீட்டுக்கு சென்று சண்டைபோட்டு உள்ளார். பின் வெட்டுபட்ட நாக்கை எடுத்து கொண்டு போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்து உள்ளார்.
குறித்த பெண், பொலிசிடம் தனது முன்னாள் காதலன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் தனது தற்காப்பு கருதியே அவனின் நாக்கை வெட்டியதாகவும் கூறினார் .
நாக்கு வெட்டப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.