ராஷி கண்ணா..

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் ராஷி கண்ணா. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சினிமாவில் நடிக்க வந்தவர். பாடகியாக வேண்டும் என்பதுதான் இவரின் சிறுவயது ஆசையாக இருந்துள்ளது. அதன்பின் ஐ.ஏ.எஸ் படித்துவிட்டு கலெக்டர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டார்.

ஆனால், மாடலிங் துறைக்கு மாறியதால் இவரின் கவனம் சினிமா பக்கம் திரும்பியுள்ளது. கல்லூரியில் படிக்கும்போதே சில விளம்பர படங்களிலும் நடித்தவர் இவர். முதலில் ஒரு ஹிந்தி படத்தில் நடித்தார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். 10க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு கோலிவுட் பக்கம் வந்தார்.

இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பல படங்களில் நடித்துவிட்டார். தற்போது அரண்மனை 4 படத்திலும், மேதாவி என்கிற படத்திலும் நடித்து வருகிறார். அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்கார் ஆகிய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அழகை மட்டும் காட்டி நடிக்காமல் நல்ல நடிப்பு திறமை உள்ள நடிகையாகவும் ராஷி கண்ணா வலம் வருகிறார். ஒருபக்கம், புதுபுது கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது கிளாமர் உடையில் தொடையை பளிச்சென காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
