லண்டனில் தனது காதலியை 16 மாதங்கள் ஒரே வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து ரத்த காயங்களுடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளார் காதலன்.
பிரபல மாடல் அழகி மர்த்தா டோலக் என்பவர் மைக்கல் குட்வின் என்பவரை காதலித்து வந்துள்ளார். தனது காதலி சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்களுக்கு மோசமான விமர்சனங்கள் வந்துள்ளன.
இதனால், இவர்கள் இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இனிமேல் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டாம் என காதலன் கண்டித்துள்ளார்.
ஆனால், மர்த்தா இதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் காதலியை தனிவீட்டில் கடந்த 18 மாதங்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார்.
தனது காதலியை தாக்கி ரத்தகாயங்களுடன் அவருடன் செல்பி எடுத்து, அந்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து காதலன் கைது செய்யப்பட்டுள்ளார், மீட்கப்பட்ட மர்த்தா இதுகுறித்து தெரிவிக்கையில்… தன்னை அடைத்து வைத்த அறையில் ஜன்னல்கள் இல்லாமல் இருந்ததாலும், பொருத்தப்பட்ட இரண்டு கதவுகளும் திறக்கமுடியாத வகையில் அடைக்கப்பட்டிருந்ததாலும் தன்னால் தப்பிக்க முடியாமல் போனது என கூறியுள்ளார்.