தடையை மீறி தூத்துக்குடிக்கு சென்ற கமல்ஹாசன்: பொலிசார் செய்த செயல்!!

671

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நேற்று பயங்கர போராட்டம் நடந்த நிலையில் 12 பேர் பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் அங்குள்ள முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று கமல் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தடை உத்தரவை மீறி கமல் மருத்துவமனைக்கு சென்றதால் அவர் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.