திருமணமான இளம் பெண்ணை சீரழித்த 60 வயது முதியவருக்கு நேர்ந்த விபரீதம்!!

1371

சென்னை….

சென்னை அண்ணாநகர் பகுதியில் 30 வயது பெண் ஒருவர் திருமணமாகி கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அமைந்தகரை சார்ந்த 60 வயதான முருகானந்தம் என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு அந்தப் பெண் தனியாக இருந்த நிலையில், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து அந்தப் பெண்ணை கதற கதற பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தபெண் புகார் கொடுத்தார். அந்த புகாரை பெற்ற போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பாலியல் பலாத்காரம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அதிலிருந்து அவர் ஜாமீனில் வெளிவந்தார். ஆனால் அதற்கான விசாரணை எழும்பூரில் உள்ள அல்லிக்குளம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி டி.எச் முகமது பாருக் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆர்த்தி பாஸ்கரன் ஆஜரானார். அப்போது இந்த வழக்கில் நீதிபதி பருக் தீர்ப்பு வழங்கினார்.

அதில், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதத் தொகையும் விதித்து உத்தரவிட்டார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.