நடுவானிலே குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி : அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!

552

கர்ப்பிணிப் பெண்..

தோஹாவிலிருந்து பாங்கொக் நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்ததால், அவசரமாக கொல்கத்தாவில் விமானம் தரையிரக்கப்பட்டுள்ளது.

கத்தார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான QR-830 என்கிற விமானம், தோஹாவிலிருந்து பாங்காக் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, பெயர் வெளியிடப்படாத 23 வயது தாய்லாந்து பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு விமானத்திலேயே குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து அதிகாலை 03:09 மணியளவில் கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிங்க, விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரியிடம் விமானி அனுமதி கேட்டார்.

அதற்கு அனுமதி கிடைத்த உடனே விமானம் பத்திரமாக தரையிங்கியது. விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக்குழு வேகமாக தாய் மற்றும் குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவக்குழு செய்தி வெளியிட்டது. பெரும்பாலும் விமான நிறுவனங்கள் கர்ப்பிணிப் பெண்களை 36 வாரங்களுக்குப் பிறகு நான்கு மணி நேரத்திற்கு மேல் பறக்க அனுமதிக்காது.

கத்தார் ஏர்வேஸ் நிறுவனமும், 36 வது வாரத்தில் அல்லது அதற்கு அப்பால் உள்ள பெண்களை பறக்க அனுமதிக்காது என வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தற்போது குழந்தை பெற்றெடுத்த பெண் எந்த மாதத்தில் இருந்தார் என்று குறிப்பிடப்படவில்லை.