நடு வீதியில் கிடந்த காதலன், பதறி துடித்த காதலி : அடுத்து நடந்த சம்பவம்!!

641

துடித்த காதலி

பிலிப்பைன்சில் தனது காதலன் விபத்தில் அடிபட்டு சாலையில் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பதறித் துடித்து ஓடோடி வந்த காதலி கண்ணீர் விட்டுக் கதற, அதன் பின் நடந்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வரும் Shiela Parayanon என்னும் அந்தப் பெண், நடு ரோட்டில் கவிழ்ந்து கிடக்கும் தனது காதலனைக் கண்டதும் அலறித் துடித்து ஓடுகிறாள். எதற்கும் தயாராக இருக்குமாறு பொலிசார் கூற, அவனது முகத்தைக் கூட பார்ப்பதற்கு பயந்து நிற்கிறாள் அந்தப் பெண்.
பொலிசார் சாலையில் கிடக்கும் அந்த நபருக்கு உதவுவதற்காக அவரை புரட்டுகிறார்கள்.

இறந்து விட்டார் என கருதப்பட்ட Jeffrey Delrio என்னும் அந்த நபர், திடீரென எழுந்து ஒரு மோதிரத்தை எடுத்து, தன் காதலியிடம் என்னை மணந்து கொள்கிறாயா என்று கேட்க, அதிர்ச்சியிலும் ஆனந்தத்திலும் அவள் ஓடிச் சென்று ஒரு பெண் பொலிசாரை கட்டியணைத்துக் கொள்கிறாள்.

பின்னர் தன்னை ஏமாற்றியதற்காக, காதலனுக்கு ஒரு அடி கொடுத்துவிட்டு அவள் சம்மதம் தெரிவிக்க, அவள் விரலில் மோதிரம் அணிவிக்கிறார் அந்த காதலன்.

அதிர்ச்சியில் தொடங்கி ஆனந்தத்தில் முடியும் இந்த காட்சிகள் அனைத்து வீடியோவாக பதிவு செய்யப்பட்டு காண்போரை பலவித உணர்வுகளுக்கு ஆளாக்குகின்றன.