செல்பியால்..

தமிழகத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த ஜோடி கிணற்றின் அருகே செல்பி எடுத்த போது தவறி விழுந்ததில், இளம் பெண் சம்பவம் இடத்திலே உ யிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராமை சேர்ந்த இளம் பெண் மெர்ஸி ஸ்டெபி. இவருக்கும் அப்பு என்பவருக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது,

இதையடுத்து இருவரும், அருகில் இருக்கும் வெல்லஞ்சேரியில் உள்ள விளைநிலத்தில் தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது கிணற்றிற்கு அருகே நின்று இருவரும் செல்பி எடுக்க முயன்ற போது, இருவரும் நிலைத்தடுமாறி கிணற்றில் விழுந்தனர்.

இதில் இருவருக்குமே நீச்சல் தெரியாததால், மெர்ஸி ஸ்டெபி சேற்றில் சிக்கிக்கொண்டார். அப்புவின் கூ க்குரலை கேட்டு ஓடிவந்த விளைநிலத்தின் உரிமையாளர் சடகோபன், உ யிருக்கு ஆ பத்தான நிலையில் இருந்த அப்புவை போராடி மீட்டு, அவரை ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அதன் பின் இது குறித்த தகவல் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த தீயணைப்பு துறையில்னர், கிணற்றில் சிக்கியிருந்த மெர்ஸி ஸ்டெபியை ச டலமாக மீட்டனர்.

திருமணம் நிச்சயமான ஒரு வாரத்தில் செல்பி மோகத்தில் மெர்சி ஸ்டெபி உ யிரிழந்தது அவரது குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.