பாசத்தால் நெகிழ்ந்த அம்ருதா.. சதித்திட்டம் தீட்டிய தந்தை : வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

714

அம்ருதா

தெலுங்கானாவில் அம்ருதாவின் கணவர் பிரணய் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அம்ருதா திருமணமான புதிதில் தனது தாயுடன் தொடர்பில் இல்லை. ஆனால், கர்ப்பமான பின்னர் அடிக்கடி தாயிடம் தொலைபேசியில் பேசி வந்துள்ளார்.

அவரது தாயும் தனது மகளுக்கு அறிவுரைகளை வழங்கி வந்துள்ளார். இந்நிலையில், அம்ருதாவுடன் தொலைபேசியில் பேசி வருவதை அவரது தாய் தன் கணவர் மாருதி ராவிடம் யதார்த்தமாக கூறி வந்துள்ளார்.

அதுபோல் தான், அம்ருதா கணவர் பிரணயுடன் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு செல்வதை தாயிடம் தெரிவிக்க, அதை வழக்கம்போல் மாருதியிடம் கூறியுள்ளார் அம்ருதாவின் தாய்.

இதனை வைத்து தான் பிரணயை கொலை செய்ய மாருதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. ஆனால், மாருதியின் சதித்திட்டம் அவரது மனைவிக்கு தெரிந்திருக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து, ஜூலை முதல் வாரத்தில் இருந்தே பிரணயை கொல்ல திட்டம் தீட்டிய மாருதி ராவ், அதற்காக கூலிப்படையிடம் ஒரு கோடி ரூபாயை பேரம் பேசி முடித்திருக்கிறார்.

அதன் பின்னர் முன்பணமாக 50 லட்சத்தை கூலிப்படையினர் கேட்க, மாருதி ராவ் 16 லட்சம் கொடுத்துவிட்டு பிரணயின் வீட்டை அவர்களுக்கு அடையாளம் காட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, தங்களுக்கு தேவையான சிம்கார்டுகளை வாங்கிய கூலிப்படையினர், போலியான எண் கொண்ட இருசக்கர வாகனம் ஒன்றையும் வாங்கியுள்ளனர். பின் ஆகஸ்ட் 14ஆம் திகதியே பிரணயை ஒரு அழகுநிலையம் அருகில் வைத்து கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், அந்த திட்டம் பிரணயின் உறவினர் அங்கிருந்ததால் நடக்கவில்லை. இதற்கு காரணம் இருவரில் யார் பிரணய் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது தான்.

அதன் பின்னர், இறுதியாக பிரணயை கொலை செய்த கூலிப்படையினர், அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்ற பின் தங்களது ஆடைகளை மாற்றியுள்ளனர். பின்பு தனித்தனி பாதைகளில் சென்று தலைமறைவாகியுள்ளனர்.