பிஞ்சுக்குழந்தையை தவிக்கவிட்டு தூக்கில் தொங்கிய தம்பதி!!

612

தூக்கில் தொங்கிய தம்பதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடன் தொல்லையால் குழந்தையை தவிக்கவிட்டு தம்பதியினர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மண்டியா மாவட்டத்தை சேர்ந்த நாகராஜூ (28) என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளா (24) என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆன் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை இவர்களுடைய வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், ஜன்னல் வழியே எட்டி பார்த்தபோது தம்பதியினர் இருவரும் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்தப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1.50 லட்சம் கடன் வாங்கியதும், அதனை திருப்பி கொடுக்க முடியாமல் தற்கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.