பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

தமிழகத்தில் பிரசவத்திற்காக வந்த பெண்ணின் வ யிற்றில் ஊ சியை வைத்து தை த்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளியை அடுத்த மரவெட்டி வலசை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் கர்ப்பமான ரம்யா, அப்பகுதிக்கு அருகாமையில் உள்ள உச்சிப்புள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது பிரசவத்திற்காக பதிவு செய்து தொடர்ந்து சி கிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 19-ஆம் திகதியன்று பிரசவத்திற்கான திகதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அன்று ஊச்சிப்புள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரம்யா அனுமதிக்கபட்டுள்ளார்.

அப்போது அவரை ப ரிசோதித்த ம ருத்துவர்கள், அவருக்கு அ றுவை சி கிச்சை செய்ய வேண்டும் என்று கூற, இதையடுத்து, உறவினர்கள் அனுமதியுடன் அ றுவை சி கிச்சை நடைபெற்றது.

அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன் பின், ரம்யாவுக்கு மிகுதியான ர த்தப்போ க்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ரம்யாவை ம ருத்துவர்கள் மீண்டும் பரிசோதித்த போது, உ டைந்து ஊ சி ஒன்று ரம்யாவின் அடி வ யிற்று எலும்பின் மேலே இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது.

அதனை அகற்றுவதற்கு போதிய அளவிலான எலும்பு சார்ந்த மருத்துவர்கள் அங்கு இல்லாததால், ரம்யாவை ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு பரிந்துரைந்துள்ளனர்.

இதையடுத்து, ராமநாதரபுத்தில் அனுமதிக்கப்பட்ட ரம்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அங்கு சிகிச்சை ஏதும் அளிக்காமல் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ரம்யாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அ லட்சியமாக செயல்பட்ட மருத்துவர்களை கண்டித்து உச்சிப்புள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு போ ராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு சற்று நேரம் ப ரபரப்பு நிலவியது.