மனைவியின் த ற்கொ லையை தடுக்காமல் பொறுமையாக வீடியோ எடுத்த கணவன்!!

480

எடுத்த கணவன்

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு நபர் தனது மனைவியைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக தற்கொ லை செய்துகொள்வதை வீடியோவாக படமெடுத்துள்ளார்.

அக்டோபர் 29, செவ்வாயன்று உத்தரபிரதேசத்தின் புடான் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது. தற்கொ லை சம்பவத்தை படமாக்கியதாக அங்கு வேலை செய்துவந்த பணிப்பெண் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து,

இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வரதட்சணை கோரியதற்காக அந்த பெண் தற்கொ லை செய்துகொண்டதாக மாமியார் மீது புகார் அளித்தார். இ றந்தவர் சுவாதி என்றும், கு ற்றவாளி கோவிந்த் என்றும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

பணிப்பெண்ணின் கூற்றுப்படி, இந்த ஜோடி கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்ததிலிருந்தே இருவரும் மகிழ்ச்சியற்று இருந்ததாகவும், சுவாதியின் மாமியார் தொடர்ந்து வ ரதட்சணை கோரியதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுவாதி க ழுத்தில் கயிற்றை கட்டிக்கொண்டு மின் விசிறியில் தொ ங்குவதை தடுக்காமல், அதனை கோவிந்த் வீடியோ எடுத்துக்கொண்டிருந்ததாக பணிப்பெண் கூறியுள்ளார். பின்னர் அந்த காட்சிகளை ஒன்லைனில் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த உடனேயே அங்கு குவிந்தவர்களிடம், சுவாதி மாரடைப்பு ஏற்பட்டு இ றந்துவிட்டதாக கோவிந்த் கூறியுள்ளார். இருப்பினும், பணிப்பெண் கொடுத்த முரண்பட்ட அறிக்கையின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், ஒன்லைனில் பரபரப்படும் தற்கொ லை வீடியோ குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.