மயிலை விழுங்க முயன்ற ராட்சத மலைப்பாம்பு : அதன் பின் நடந்த சம்பவம்!!

355

மலைப்பாம்பு

தமிழகத்தில் மயிலை விழுங்க முயன்ற 10 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு அப்பகுதி மக்கள் துணிச்சலுடன் பிடித்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரத்தைச் சேர்ந்தவர் சரவணபெருமாள். இவருக்கு சொந்தமான வயலில் இன்று மாலை மயில் ஒன்றை சுமார் 10 அடி நீளமுள்ள ராட்சத மலைப் பாம்பு விழுங்க முற்பட்டது.

இதை அப்பகுதி வழியே வந்த ஒரு சிலர் பார்த்து, துணிச்சலுடன் அந்த பாம்ப்பை பிடித்து, மயிலை காப்பாற்றினர். அதன் பின் பிடிபட்ட மலைப்பாம்பு குறித்து தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு மக்கள் தெரிவித்தனர்.

அதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பதாக கொண்டு சென்றனர். அவர்கள் பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்துவிட்டதாக தெரிவித்த நிலையில், அந்த பாம்பின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.