சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி சுரங்கப் பாதையில் கடந்த ஏப்ரல் 25-ந்தேதி வெட்டப்பட்ட நிலையில் விஜயராகவன் என்பவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், மலேசியாவில் ஏற்பட்ட கள்ளக்காதலால் இவர் கொலைசெய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.விஜயராகவன் 4 ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் வேலை பார்த்துள்ளார். அங்கு திருமணமான ரம்யா என்பவருடன் இவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இது அந்த பெண்ணின் கணவருக்கு தெரிந்ததும் பிரச்சனை ஆரம்பமானது. இதனால் விஜயராகவன் தமிழகம் திரும்பிவிட்டார். எனினும் அந்த பெண் அடிக்கடி தமிழகம் வந்து விஜயராகவனுடன் சேர்ந்து ஜாலியாக சுற்றியும் , உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
கடைசியாக அந்த பெண் ஏப்ரல் 13 ஆம் திகதி தமிழகம் வந்துள்ளார். அவருடன் சேர்ந்து விஜயராகவன் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்துள்ளார்.
கள்ளக்காதலை அறிந்த அந்த பெண்ணின் கணவர் கூலிப்படையை ஏவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் தொடர்புடைய மலேசிய பெண்ணிடம் விசாரணை நடத்தினால்தான் முழுவிபரம் தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளர்.