ரத்தவெள்ளத்தில் கிடந்த அண்ணன் – அண்ணி: பதறிப்போன தம்பி

591

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் தம்பதியினர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து தம்பி அதிர்ச்சியடைந்த பொலிசிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அஜய் குஷ்வா – மினா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அஜய் குஷ்வா கேட்டரிங் சர்வீஸுக்கு ஆட்களைப் பிடித்துக்கொடுக்கும் ஏஜென்சியை நடத்திவந்துள்ளார்.

இந்நிலையில், இவர்கள் தம்பதியினர் இருவரும் நேற்று ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்துள்ளனர். ஆனால் குழந்தைகள் எவ்வித தாக்குதுலுக்கும் ஆளாகாமல் இருந்துள்ளனர்.

இதுகுறித்து இறந்துபோன அஜய்யின் தம்பி கூறியதாவது, வழக்கமாக இரவு வீட்டுக்குச் செல்லும்போது கதவுகள் பூட்டியிருக்கும். ஆனால், அன்று கதவுகள் திறந்திருந்தன. வீட்டின் கேட் கூட பூட்டப்படவில்லை. எப்போதும் எனது சகோதரர்தான் கதவைத் திறப்பார். அன்று அவ்வாறு இல்லை. உள்ளே சென்று பார்த்தபோது, எனது சகோதரரும் அவரது மனைவியும் ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்தனர் என பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

தம்பதியினரை கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு கொலை செய்துள்ளனர். கொலைக்கான காரணம்குறித்து தெளிவாக எதுவும் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளோம். விசாரணைக்குப் பின்னரே முழுவிவரமும் தெரியவரும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.