ரயில்வே பாலத்தில் திடீரென பெண்களை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்துவந்த மர்ம நபர் : சிக்கிய சிசிடிவி!!

527

சிக்கிய சிசிடிவி

மும்பை ரயில்வே பாலத்தில் தொடர்ந்து பெ ண்களிடம் அ த்துமீறி நடந்துகொண்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மும்பை மதுங்காவில் ஒரு ரயில்வே பாலத்தில் பெண்களைத் தள்ளிவிட்டு, பின்னர் அவர்களைப் பிடித்து முத்தமிட்ட,

ஒரு தொடர் பா லியல் வ ன்கொ டுமையாளரை மும்பையில் ரயில்வே பொலிஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அந்த நபர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரைஜூர் ஹபீபூர் கான் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ரைஜூர் மீது வழக்கு பதிவு செய்ய எந்த பெண்களும் வெளியே வரவில்லை என்பதால், தி ருட்டு வழக்கில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினர் இப்போது பெண்கள் முன் வந்து கு ற்றம் சாட்டப்பட்டவர் மீது புகார் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, பெ ண்களின் அடையாளம் வெளிப்படுத்தப்படாது என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

பெண்கள் அவருக்கு எ திராக புகார் அளிக்காவிட்டால், ரைஜூருக்கு எதிராக பா லியல் வ ன்கொ டுமை வழக்கைத் தா க்கல் செய்வதற்கான சட்ட வழியைக் கண்டுபிடிக்கவும் காவல்துறை முயற்சித்து வருகிறது.

ஜனவரி 25ம் திகதி சிசிடிவியில் சி க்கிய காட்சியை வைத்து பொலிஸார் வி சாரணையை ஆரம்பித்துள்ளனர். ஒரு பெண்ணை அவர் முத்தமிட முயன்றபோது அவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரைஜூருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அவர், தச்சர் வேலைக்காக மும்பைக்கு வருகை தந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.