வவுனியா மாவட்ட கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு!!

325

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் நடாத்தப்பட்டு வரும் 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பிரிவு மூன்றிற்கான கடினப்பந்து துடுப்பாட்ட சுற்றுபோட்டியின் இறுதிச்சுற்றுப்போட்டிக்கு வவுனியா பிரண்ட்ஸ் விளையாட்டு கழகம் தகுதி பெற்றுள்ளது.

வடமாகாண ரீதியாக இடம்பெற்று வரும் குறித்த சுற்று போட்டியின் முதலாவது அரை இறுதி ஆட்டம் வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. இப்போட்டியில் வவுனியா பிரண்ட்ஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து முல்லைத்தீவு பி.சி.சி அணி மோதியிருந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பிரண்ஸ் அணியினர் ஐம்பது ஓவர் பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 260 ஓட்டங்களை குவித்திருந்தது. அணி சார்பாக சாந்தன் 64 ஓட்டங்களையும் கயான் 50 ஓட்டங்களையும் பெற்றனர். பி. சி.சி அணி சார்பில் பந்து வீச்சில் விஜிதரன், அஞ்ஜியன் தலா 03 இலக்குகளை கைப்பற்றியிருந்தனர்.

261 என்ற வெற்றி இலக்கை எதிர்த்து துடுப்பெடுத்தாடிய முல்லைத்தீவு அணி 199 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்திருந்தது. வெற்றியீட்டிய வவுனியா பிரண்ட்ஸ் அணியினர் தம்புள்ளை ரங்கிரிய சர்வதேச விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள இறுதி சுற்று போட்டியில் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.