விமான விபத்தில் இறப்பதற்கு முன் கடைசியாக காதலிக்கு விமானி அனுப்பிய குறுஞ்செய்தி!!

799

காதலிக்கு விமானி அனுப்பிய குறுஞ்செய்தி

மளமளவென தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளான சமயத்தில் தன்னுடைய காதலிக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக விமானி மெசேஜ் அனுப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து புறப்பட்ட சூப்பர் ஜெட் 100 என்கிற பயணிகள் விமானமானது, புறப்பட்ட சில நிமிடங்களிலே திடீரென தீ பற்றி எரிந்தது.

இந்த விபத்தின் போது விமானத்தில் பயணித்த 5 விமானிகளில் மாக்சிம் மோஸியேவ் என்கிற ஒரு விமானி உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விபத்திற்கு முன்னர் மாக்சிம் மோஸியேவ் தன்னுடைய காதலி க்ஸ்சியா ஒபிர்ட்ஸ்வாவாவிற்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக மெசேஜ் செய்துள்ளார்.

அதில், கவலைப்பட வேண்டாம். அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.