திண்டுக்கல்….
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே எட்டி குளத்து பட்டியை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கும் மோளப்பாடியூரை சேர்ந்த வீரழகு என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வீரழகு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சமீபத்தில் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற வீரழகு அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், ஆனந்தின் செல்போன் வாட்ஸ்ஆப்பில் தனது மனைவி வேறு ஆணுடன் திருமணம் செய்து கொண்டதாக புகைபடம் வந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் பணி முடித்து வீட்டுக்கு வந்து பார்த்ததில் மணைவியை காணவில்லை.
இதை தொடர்ந்து தன் மனைவியை மீட்டு தரக்கோரி வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அழித்தார். இதனை தொடர்ந்து போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள்.
சண்டை போட்டுகொண்டு வெளியேறிய மனைவி வேறொரு ஆணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக கணவனுக்கு தகவல் அளித்த சம்பவம் உறவினர்களை பேரதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.