அது என்னுடைய குழந்தை அல்ல : அவசரப்பட்டு கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன்!!

682

கர்ப்பிணி

அமெரிக்காவில் மனைவியின் வயிற்றில் வளர்வது தன்னுடைய குழந்தை அல்ல என சந்தேகித்து நிறைந்த கர்ப்பிணியை கணவன் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடத்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் Jose Soto-Escalera (41), இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயிற்றில் வளரும் குழந்தையை கலைக்க சொல்லி மனைவியிடம் 500 டொலர்களை கொடுத்துள்ளார்.

ஆனால் கருவை கலைக்காத அவருடைய மனைவி Tania Wise (23), அந்த பணத்தினை தன்னுடைய முன்னாள் காதலனிடம் செலவுக்கு கொடுத்துள்ளார். இதனை அறிந்த கொண்ட Jose கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதியன்று, ஆத்திரத்தில் கர்ப்பிணி மனைவி Tania-வை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், அன்று இரவு 10 மணிக்கு Jose போனிலிருந்து மனைவி Tania-விற்கு அழைப்பு சென்றிருப்பதை வைத்து கைது செய்தனர்.

இந்த நிலையில் குற்றவாளியிடம் கடந்த திங்கட்கிழமையன்று வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் கூறிய Jose, நான் என்னுடைய மனைவியிடம் கருவை கலைக்க கூறியும் அவள் அதனை கலைக்காமல் முன்னாள் காதலனுக்கு கொடுத்திருக்கிறார். அதனால் தான் எனக்கு கோபம் வந்து கொலை செய்தேன். அவளுடைய வயிற்றில் வளர்ந்தது என்னுடைய குழந்தையும் அல்ல. அது அவளுடைய முன்னாள் காதலனின் குழந்தை என கூறியுள்ளார்.

இதனையடுத்து இறந்த 8 மாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தையின் கருவை வைத்து டிஎன் ஏ சோதனை மேற்கொண்டனர். அதில், வயிற்றில் வளர்ந்தது Jose குழந்தை தான் என்பது தெரியவந்தது. மேலும் குழந்தை பிறப்பதற்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளது. அதற்குள் Jose அவசரப்பட்டு கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.