ஆட்டோவில் சென்ற இளைஞனுக்கு நடந்த கொடூரம்!!

486

திருவெறும்பூர்….

திருவெறும்பூர் அருகே கடந்த இரண்டு நாளுக்கு முன்னர் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தம்பியின் படுகொலைக்கு, பழிக்குப்பழி தீர்த்த அண்ணன்கள் உட்பட 10 பேர் கைது.

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்த பெலிக்ஸ் தாம்சன்ராஜ்(25) என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை லோடு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொன்றது.

தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடத்தினர், முதற்கட்ட விசாரணையில், திருச்சி பொன்மலைப்பட்டி கடைவீதியில் கடந்த செப்டம்பர் மாதம் சின்ராஜ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

அந்த கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அலெக்ஸ் என்பவரின் தம்பி தான் பெலிக்ஸ் தாம்சன்ராஜ் என்பது தெரிய வந்துள்ளது.

திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜீத் குமார் உத்தரவின் பேரில் கொலையாளிகளை பிடிக்க திருவெறும்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ் ஞானவேலன் வெற்றிவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தொடர் விசாரணையில் கிடைக்கப்பெற்ற தடயங்கள், தகவல்கள் அடிப்படையில் பெளிக்ஸ் தாம்சன் ராஜுவை கொலை செய்தது சின்ராசுவின் அண்ணன்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பொன்மலைப்பட்டி அருகே உள்ள காட்டுப் பகுதிகள் கொலையாளிகள் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அங்கு கொலையாளிகளை சுற்றிவளைத்த 5 பேரை கைது செய்தனர், மேலும் இதில் தொடர்புடைய மற்ற 5பேரும் சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு சென்று அவர்களையும் கைது செய்தனர்.

இதில் சின்ராஜிவின் அண்ணன்கள் சக்திவேல், ரமேஷ், மற்றும் கூட்டாளிகளான மனோஜ் குமார், சுபாஷ் , பிரகாஷ்ராஜ், கிஷோர், ஜோஸ்வா பீட்டர், மனோஜ் சிவராம், டார்வின் ஆன்ட்றோ உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.