“ஆள விடுடா சாமி” என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிரபல நடிகை !

310

பிக்பாஸ்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பு ஆகும். இப்போது கரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சொன்னபடியே நேற்று தொடங்கபட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற போகிறவர்கள் யார் என்றால், ஷிவானி நாராயணன், பூனம் பஜ்வா, கிரண், சிவாங்கி, சூர்யாதேவி, சனம் ஷெட்டி,புகழ், ரம்யா பாண்டியன், அதுல்யா, மணிமேகலை, அனுமோகன், அம்ரிதா ஐயர் உள்ளிட்டோர் இம்முறை போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாகவும் கதகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தற்போது முதல் 7 போட்டியாளர்கள் யார் யார் என்ற விபரங்கள் நம்ப தகுந்த வட்டரங்களிடம் இருந்து நமக்கு கிடைத்துள்ளன. அதன் படி, நடிகர்களின் ஜித்தன் ரமேஷ்,

காமெடி நடிகர் அணு மோகன், தொகுப்பாளரும் நடிகருமான ரியோ ராஜ், குட்டி பாபி சிம்ஹா என்று அறியப்படும் பாடகர் அஜீத் காலிக் ஆகியோரும்.

நடிகை, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், காயத்ரி விஜய் டிவி கேப்ரில்லா ஆகியோரும் கலந்து கொள்வது உறுதியான நிலையில் தற்போது காயத்ரி விலகியுள்ளார்.

விஜய்சேதுபதியுடன் 7 படங்களில் ஜோடியாக நடித்த காயத்ரி, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி காயத்ரியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.