இரண்டு கால்களையும் இழந்து கதறிய காதலனை கரம்பிடித்த ஷில்பா : தம்பதியின் தற்போதைய நிலை என்ன?

780

ஷில்பா

தமிழ்நாட்டில் ஐந்து மாதங்களுக்கு முன், ரயில் விபத்தில் கால்களைப் பறிகொடுத்த விஜய் என்பவர் செயற்கைக் கால்களுடன் நடக்க ஆரம்பித்துள்ளதாக அவர் மனைவி ஷில்பா கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜய்யும், ஷில்பாவும் காதலித்து வந்த நிலையில் ரயில் விபத்தில் கால்களை விஜய் பறிகொடுத்தார்.
கால்கள் இல்லாத விஜய்யை ஷில்பா திருமணம் செய்ய அவர் வீட்டில் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதையும் மீறி அவரை திருமணம் செய்தார் ஷில்பா.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜய்யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் ஷில்பா. அவர் கூறுகையில், போன வாரமே விஜய் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருக்கணும். அது கொஞ்சம் தள்ளிப் போய்விட்டது.

இப்போது அவர் நன்றாக நடக்க ஆரம்பிச்சிட்டாரு, நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணப் போறதா மருத்துவர்கள் கூறியுள்ளனர் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

விஜய் கூறுகையில், வீட்டுக்குப் போகணும், நான் படித்த கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு ஏத்த வேலை தேடணும். அம்மா, ஷில்பா, என் தம்பி, தங்கச்சி எல்லாரையும் நன்றாக வைத்து கொள்ள வேண்டும் என்பதே என் எண்ணம் என கூறியுள்ளார்.