ஆந்திர மாநிலம்….
ஆந்திர மாநிலம், காக்கிநாடா நகரில் அரசு வழக்கறிஞர் அக்பர் அசாம் (50) உடலை போலீஸார் தோண்டி எடுத்து ஞாயிற்றுக்கிழமை பிரேதப் பரிசோதனை செய்தனர். சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணிபுரிந்த அக்பர் அசாம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி அன்று இறந்தார். இது இயற்கை மரணம் என்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் நம்பினர்.
ஆனால் அது இயற்கையான மரணம் இல்லை என்றும், அது திட்டமிட்ட கொலை என்றும் தகவல்கள் வெளியாகியது. இதுபற்றி கூறிய காவல்துறை, ‘அக்பர் அசாமின் முதல் மனைவி சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பின்னர் ஏனாம் பகுதியை சேர்ந்த அகமதுன்னிசா பேகம் (36) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, அசாம் தனது மனைவிக்கு ஒரு புதிய மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் அவர் தனது பழைய போனை தனது தந்தையிடம் கொடுத்தார். இறந்தவரின் தந்தை தொலைபேசியில் வாட்ஸ்அப்பில் உள்ள தகவல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.அசாம் தனது குடும்பத்துடன் வசித்து வந்த அதே அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் இருவரும் வசித்து வந்தனர்.
அவர்கள் ராஜஸ்தானை சேர்ந்த ராஜேஷ் ஜெயின் மற்றும் கிரண் என்று தெரிய வந்தது. அசாமின் தந்தை ஆகஸ்ட் 17 அன்று காவல்துறையை அணுகி தனது மகனின் மரணத்திற்கான காரணம் குறித்து சந்தேகம் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில், ஜூன் 23ம் தேதி, அக்பர் அசாமின் மனைவி, அசாமுக்கு உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்தது தெரியவந்தது.
அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, கிரண் ஒரு துணியில் குளோரோஃபார்மை ஊற்றி, ஆசாமின் மூக்கின் அருகே இறுக்கமாகப் பிடித்தார். அப்போது அசாமின் மனைவி கிரணுக்கு உதவினார் என்றும் கூறப்படுகிறது.அதே நேரத்தில் ராஜேஷ் ஜெயின் பிளாட்டுக்கு வெளியே ஒரு கண்காணிப்பு வைத்திருந்தார்.
அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டதால் அசாம் உயிரிழந்தார். போலீசார் அசாமின் மனைவி மற்றும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த இருவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.