திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், மருத்துவமனை வளாகம் இன்னும் பரபரப்பு குறையாமல் இருக்கிறது.
அங்கு குவிந்திருக்கும் தொண்டர்கள் தங்கள் தலைவரின் உடல்நிலை குறித்து தெளிவாக அறிந்துகொள்ளும் வரை அங்கிருந்து செல்லப்போவதில்லை என கூறிவருகின்றனர். நேற்று தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக பொலிசார் தடியடி நடத்தினர்.
காவேரி மருத்துவமனை வளாகம் முன்பாக குவிந்திருக்கும் தொண்டர்களில் அதிக கவனம் ஈர்த்தவர் ஜெயலட்சுமி. இவர் இரண்டு நாட்களாக கண்ணில் தூக்கமின்றி, மருத்துவமனையில் வளாகத்திலேயே சோர்வாக இருக்கிறார்.
திருவாதூரில் இருந்து வந்திருக்கும் இவர், கருணாநிதிக்காக என் உயிரையே கொடுப்பேன், இந்த தூக்கத்தை விட்டுக்கொடுக்கமாட்டேனா என்கிறார்.
எனக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்து கருணாநிதி அய்யாவும் என் உயிராக வாழ்ந்துக்கிட்ருக்கேன். குடிசையில் இருந்தவளுக்கு வீடு கட்டிக்கொடுத்து, மகன்களோட படிப்புக்கு உதவி செய்தவர். அவர் இன்னைக்கு படுத்த படுக்கயில் கிடக்கிறதை காது கொடுத்து கேட்க முடியவில்லை.
என் புருஷன் பிள்ளைகளைவிட கலைஞர் அய்யாதான் முக்கியம். அவர் குணமாகி கோபாலபுரம் இல்லத்திற்கு செல்லும்வரை, நான் மூணு வேளையும் சாப்பிடவோ, தூங்கவோ. என் ஊருக்கு புறப்பட்டு செல்லவோ மாட்டேன் என்கிறார்.