ஏக்கத்துடன் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய 8 வயது மகள் : கண்கலங்க வைத்த புகைப்படம்!!

734

உயிரிழந்த தனது தந்தைக்கு 8 வயது மகள் அஞ்சலி செலுத்திய காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 10ம் திகதியன்று காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில், தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், தீபக் நெய்ன்வால் என்ற வீரர் படுகாயம் அடைந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல், சொந்த ஊரானஉத்தரகாண்டில் வைக்கப்பட்டது.

பெற்றோர் உறவினர்கள் என அனைவரும் வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது, இறந்துபோன ராணுவவீரரின் 8 வயது மகள் தனது தந்தையின் உடல் முன் நின்றுகொண்டு, ஏக்கத்துடன் அழுதுகொண்டே அஞ்சலி செலுத்திய காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.