
இந்தியாவில் கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கியதால், அவரின் மகன் தாயின் காலில் விழுந்தது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் கணவரை இழந்த பெண் ஒருவர் தன் மகனை கஷ்டப்பட்டு, படிக்க வைத்து ஆளாக்கியுள்ளார். மகன் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளான்.
மகனின் பாசி மோட் பரேல் நிகழ்வில் கூட கலந்து கொள்ள முடியாத அளவிற்கு, அவரின் தாய்க்கு வயலில் வேலை இருந்துள்ளது. நிகழ்ச்சி முடிந்ததும், வயலுக்கு ஓடி வந்த மகன் தாயின் காலில் விழுந்து பாதம் தொட்டு வணங்கி ஆசி வாங்கியுள்ளார்.
இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் பகிர்ந்தவுடன் 17,000 பேர் லைக் செய்துள்ளனர். புகைப்படத்தைக் கண்ட இணையவாசி ஒருவர் மகன் காட்டிய நன்றியையும், தாயின் மகிமையையும், பெற்றோரை வணங்கும் சமுதாயத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தாயின் கஷ்டத்தையும், அவர்களின் வெற்றியையும் ஒரே புகைப்படம் என்று மற்றொரு இணையவாசி குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒரு மகனை வளர்த்த தாயிக்கு பாரட்டுகள் என்றும் இணையவாசிகள் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.
மேலும் பிக்சர் ஆப் இந்தியா என்ற இணையதளத்தில் இந்த புகைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.