தமிழகத்தில் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை காரணமாக அவர்கள் குடும்பத்துடன் விருந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டதால், அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
கடலூர் மத்திய சிறையில் 700-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் தண்டனை கைதிகள். இந்நிலையில் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை காரணமாக, அவர்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து விருந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டனர்.
அதன் படி 27 பேரும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களை நேற்று சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
அப்போது சிறையில் சமைத்து கொடுக்கப்பட்ட உணவினை அவர்களுக்கு ஊட்டி விடுவது, குழந்தைகளுடன் கொஞ்சி பேசியது மற்றும் தாயின் மடியில் உறங்குவது போன்ற உணர்ச்சிகரமான புகைப்படங்களை கடலூர் மத்திய சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கணவனை மனைவி பார்க்காமலும், குழந்தைகள் தந்தையை பார்க்காமலும், வயதான பெற்றோர் மகனை சந்திக்காமலும் வாழ்ந்து வந்த நிலையில் இந்த சந்திப்பின் மூலம் இருத்தரபினரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கத்தக்கது.