கருணாநிதி இறுச்சடங்கில் பரபரப்பாக செயல்பட்டு பலரின் பாராட்டை பெற்ற பெண் : அவர் யார் தெரியுமா?

1137

கருணாநிதி இறுதிச்சடங்கில் பம்பரம் போல செயல்பட்ட பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி என தெரியவந்துள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்குகள் நேற்று மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகில் நடைபெற்றது. அப்போது ஒரு பெண் அங்குமிங்கும் பம்பரமாக சுழன்று பணிகளுக்கான உதவிகளை செய்தார்.

அப்பெண் கருணாநிதியின் உறவினர் என பலரும் நினைத்திருந்த நிலையில், அவர் பெயர் அமுதா என்பதும் அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதும் தெரியவந்துள்ளது.

அமுதா கருணாநிதியின் வழியனுப்பு நிகழ்ச்சி பொறுப்பாளராக நேற்று செயல்பட்டுள்ளார். அதாவது கருணாநிதி குடும்ப உறுப்பினர்களிடம் உடல் அடக்கம் செய்வது தொடர்பான அரசு நடைமுறைகளை எடுத்துக்கூறி பரபரப்பாக செயல்பட்டார் அமுதா.

இதோடு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் திமுக தலைவரின் உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.

இதன் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக போர்கால அடைப்படையில் செய்து கொடுத்ததோடு இறுதியாக கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரும் ஒரு பிடி மண்ணையும் அள்ளிப் போட்டார். அமுதாவின் செயல் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.