கர்ப்பிணி பசுவை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்த சைகோ : தாங்க முடியாமல் உயிரிழந்த பசு!!

1437

மேற்குவங்க மாநிலம்…..

மேற்குவங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், நம்கானா தொகுதியின் வடக்கு சந்தன்பிடி பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி புய்யா, இவர் தனது தொழுவத்தில் பசு ஒன்றை வளர்த்து வந்தார், இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பிரத்யுத் என்ற இளைஞர் சில்மிஷ பேர்வழியாக இருந்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் ஆர்த்தியின் மாட்டுத்தொழுவத்திற்குள் நுழைந்த அவர், அங்கிருந்த கர்ப்பிணிப் பசுவை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நள்ளிரவில் யாருமில்லாததால், அப்பசுவை அவர் அதிகம் துன்புறுத்தியதாக தெரிகிறது.

இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மாடு இறந்தது, பின்னர் பொழுது விடிந்து பார்த்தபோது பசுவின் நிலைமையைக் கண்டு ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்,

பசுவின் பெண்ணுறுப்பில் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு பக்கத்து வீட்டு பிரத்யுத் மீது சந்தேகம் ஏற்பட்டது, ஏனெனில் ஏற்கனவே பிரதீப் கால்நடைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் பழக்கமுடையவர் என்பதால் அவர்தான் தங்கள் பசுவையும் கொடுமை செய்திருக்கக் கூடும் என சந்தேகித்தனர்.

இதையடுத்து அவர் மீது உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், போலீசார் அவரை பிடித்து சென்று விசாரித்தனர்,

அதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரிகிறது, இதனையடுத்து பிரத்யுத் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 வின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பிரத்யூத் மீது ஏற்கனவே ஆடு, நாய் போன்ற கால்நடைகளுடன் உடலுறவு கொண்டது, மற்றும் திருடு, வழிப்பறி போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.