கர்ப்பிணி பெண் கை குழந்தையுடன் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டதால் பரபரப்பு!! நடந்தது என்ன??

627

சேலம்….

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கீதா 7 மாத கர்பிணியாக உள்ளார். இந்நிலையில், இன்று சங்கீதா தனது கை குழந்தை மற்றும் மாமியாருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தனர்.

அப்போது இருவரும் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர் இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், தனது கணவர் பாபு வெள்ளி பட்டறையில் கூலிவேலை செய்து வருகிறார். கடந்த வாரம் தனது கணவரை போலீசார் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்துள்ளனர் இதனைத் தொடர்ந்து அவ்வப்போது காவல்துறையினர் வீட்டுக்கு வந்து விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி வருகின்றனர்.

மேலும், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு எனது தந்தை மாதேஸ்வரனை காவல்துறை அழைத்துச் சென்றனர். ஆனால் இதுவரை தந்தை வீடு வந்து சேரவில்லை என்னவென்று தெரியவில்லை இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத்தால் மிகுந்த வேதனை அளிப்பதாகவும் இதனால் மிகுந்த வேதனை அடைந்த நாங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள நான் எனது குழந்தை மாமியார் மூன்று பேரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார்.

எனவே பொய் வழக்குப் போட்டு கைது செய்த எனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என்றும் தந்தையை உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பொய் வழக்கு போட்ட காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து காவல்துறையினர் ஆம்புலன்சை வரவழைத்து மண்ணெண்ணெய் ஊற்றியதால் கருவில் இருக்கும் குழந்தைக்கும் கர்ப்பிணி பெண்ணுக்கும் சிகிச்சை கொடுக்க சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரண்டரை மாத கைக்குழந்தையுடன் கர்ப்பிணி பெண் மற்றும் மாமியார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு நிலவியது.