குழந்தைகளை நடுதெருவிலும், குப்பைதொட்டியிலும் விட்டு செல்லும் பல சம்பவங்கள் இன்றும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.உத்திரபிரதேச மாநிலத்தில் காரில் இருந்தவாரே பெண் ஒருவர் பச்சிளங்குழந்தையை தெருவில் வைத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அந்த குழந்தையை மீட்டவர்கள் குழந்தை கவலைகிடமான நிலையில் இருப்பதாகவும், சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்