குடும்பத்தின் சூழ்நிலையில் சிறுவனின் ஆசை.. ஒரே புகைப்படத்தால் மாறிப்போன வாழ்க்கை!!

630

இன்றைய காலத்தில் படிப்பதற்கு பல அறக்கட்டளைகள் வந்த நிலையிலும், பல குழந்தைகள் குடும்பத்தின் சூழ்நிலைக் காரணமாக படிப்பை தொடர முடியாமல் பாதியில் நிறுத்தி விடுகின்றனர். மேலும், சிலர் பள்ளி பக்கமே செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிரது.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு சிறுவன் படிப்பின் மீதான ஆர்வத்தினால் செய்த செயல் உலகளவில் தற்போது எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது.

அதாவது, வீட்டின் வறுமை நிலையிலும் அருகில் உள்ள மக்-டொனால்ஸில் உள்ள வெளிச்சத்தை பயன்படுத்தி தான் இவன் இரவு நேரத்தில் தனது வீட்டு பாடத்தை செய்கிறான்.

அவர்களது வீட்டில் ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சம் கூட இரவில் தருவது இல்லை. ஆனாலும் படிக்கவேண்டும் என்ற சிறுவனின் ஆசை பலருக்கு முன்னுதாரணமாக உள்ளது.

இந்தப் புகைப்படம் வெளியாகி பலரது உள்ளங்களை கவர்ந்துள்ளது. உலகில் உள்ள பல ஆயிரக்கணக்காம மக்கள் இச்சிறுவனின் படிப்புக்கு உதவிசெய்ய முற்பட்டுள்ளனர். ஒரு புகைப்படத்தால் இவன் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது