குளியலறையில் சடலமாக கிடந்த தாய் : பிரபல நடிகரே கொன்றது அம்பலம்!!

811

சடலமாக கிடந்த தாய்

மும்பையில் தாயை குளியலறையில் தள்ளி கொலை செய்த விவகாரத்தில், மொடலிங் நடிகரை பொலிசார் கைது செய்துள்ளனர். லோகந்த்வாலா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில், லக்சயா சிங் என்ற விளம்பர நடிகரும், அவரது தாயார் சுனிதாவும் வசித்து வந்தனர். மது போதைக்கு அடிமையான இவருக்கும் தாய்க்கும் இடையே பணத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, ஏற்பட்ட கைகலப்பில் தாய் சுனிதாவை, நடிகர் லக்சயா சிங் குளியலறையில் தள்ளியதாக கூறப்படுகிறது. வாஸ்பேஷினில் தலை மோதி, ரத்த வெள்ளத்தில் சரிந்த சுனிதாவை கவனிக்காத அவரது மகன், கதவை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

காலையில் குளியலறை கதவை திறந்தபோது, தாய் சுனிதா சடலமாக கிடந்ததை கண்ட லக்சயா சிங், பொலிசுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பொலிசார் அங்கு வந்த நிலையில் யாரோ மந்திரம் செய்து தாயை கொன்றுவிட்டதாக லக்சயா கூறியுள்ளார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் லக்சயா தான் அவரது தாய் சுனிதாவை கொன்றது உறுதியானது. இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.