கோட்டையில் புதைந்து கிடக்கும் கோடிக்கணக்கான தங்க புதையல்கள்!… தொட நினைத்தால் பிணமாகும் மர்மம்?

1957

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள கோட்டை ஒன்றில் கோடிக்கணக்கான தங்க புதையல்கள் காணப்படுவதாகவும், அதனை முதலைகள் காவல் காப்பதாகவும் இன்று வரையும் நம்பப்படுகிறது.

மன்னர் ஆட்சி காலங்களின் போது சேகரிக்கப்பட்ட தங்கம், விலை உயர்ந்த ஆபரணங்களை சுரங்கத்திலும், ரகசிய கோட்டைகளிலும் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர்.

அத்துடன் இந்த சொத்துகள் ரகசியமாக இருந்தமையினால் கால மாற்றத்தில் இவை புதையலாக வெளிப்படுகின்றன.குஜராத் மாநிலத்தில் உள்ள கிர்நார் சிகரத்திற்குள் செல்ல 9999 படிகளை உடைய மலைபாதைகள் மற்றும் கோவில்களை கடக்க வேண்டும்.

மிக முக்கியமாக மர்மமான பகுதியாக காணப்படும் உபர்கோட் கோட்டை கிமு 320ம் ஆண்டில் சந்திரகுப்த மௌரியரால் கட்டப்பட்டது.கோட்டையின் ஒரு பகுதியில் உள்ள குகைகள் கி.பி 1 மற்றும் 4-ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.

இந்தக் குகைகளில் அழகான நுழைவாயில்கள் மற்றும் தூண்கள், தண்ணீர் கோட்டைகள், சட்டசபை மண்டபம் மற்றும் தியானம் மண்டபம் போன்றவை உள்ளன.

இவற்றைக் கடந்து இருள் சூழ்ந்த சுரங்கத்தில் பயணித்தால் புதையல் இருப்பதாக நம்பப்படுகிறது. அதற்கான மறைமுகக் குறியீடுகளும் குகையின் உட்புறத்தில் காணப்படுகிறது.

அத்துடன் குகையின் உள்ளே 1 மீற்றர் தூரத்தில் சுமார் 300 அடி ஆழம் கொண்ட அகழியில் முதலைகள் வளர்க்கப்பட்டதற்கான தடயங்களை காணலாம்.

யாரேனும் உள்ளே வந்தால் முதலைக்கு இரையாகும்படி இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இன்று முதலைகள் இல்லாவிட்டாலும் புதையலை தேடிச் செல்பவர்கள் உயிரிழந்துவிடுவது தொடர்கதையாகி உள்ளதாம்.

இதில் கோடிக்கணக்கில் பெறுமதி வாய்ந்த தங்கங்கள் இருப்பதாக நம்பப்படுகின்றது.