சமாதியில் இருந்து திரும்புவார் : 6 ஆண்டுகளாக சாமியாரின் உடலை பாதுகாக்கும் பக்தர்கள்!!

521

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சமாதியில் இருந்து திரும்பி உ யிருடன் வருவார் என்ற நம்பிக்கையில் சாமியாரின் உடலை பக்தர்கள் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பாதுகாத்து வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தின் லுதியானா பகுதியில் செயல்பட்டுவரும் திவ்ய ஜோதி ஜக்ரிதி சன்ஸ்தான் அமைப்பின் தலைவரான அசுதோஷ் மகாராஜ் என்பவரின் உடலையே பக்தர்கள் பா துகாத்து வருகின்றனர்.

50 ஏக்கர் பரப்பளவு கொண்ட திவ்ய ஜோதி ஜக்ரிதி சன்ஸ்தான் வளாகத்தில் இவரது உடல் கடந்த 6 ஆண்டுகளாக பா துகாக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு லுதியானாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் வைத்து அசுதோஷ் மகாராஜ் மரணமடைந்துள்ளார்.

உ டல் உபாதைகளை அடுத்தே அசுதோஷ் மகாராஜ் ம ரணமடைந்துள்ளார். மருத்துவர்களும் அவரின் ம ரணத்தை உறுதி செய்துள்ளனர்.

ஆனால் அவர் சமாதியடைந்துள்ளார், மீண்டு வருவார் என்றே அவரது சீடர்களும் பக்தர்களும் நம்பி வருகின்றனர்.

திவ்ய ஜோதி ஜக்ரிதி சன்ஸ்தான் வளாகத்தில் ஒரு சிறப்பு அறையில் இவரது உடல் பாதுகாக்கப்படுகிறது.

24 மணி நேரமும் காவலுக்கும் ஆட்கள் பணியமர்த்தப்பட்டுள்ளது. இந்த அறையில் எவரையும் அனுமதிக்கப்படுவதில்லை.

மட்டுமின்றி திவ்ய ஜோதி ஜக்ரிதி சன்ஸ்தான் வளாகத்திற்கு வெளியே பொலிசாரும் கா வல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு இந்த ஆசிரமத்திற்கு வந்து சென்றவர்களில் முக்கியமானவர் தற்போதைய பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்.

கடந்த ஆறு ஆண்டுகளாக அசுதோஷ் மகாராஜின் உ டலுக்கு எந்த மாறுதலும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றங்களின் உத்தரவின் அடிப்படையில் பரி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அவ்வப்போது சிறப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.