மத்திய பிரதேசத்தில் பாஜக இளைஞரணி தலைவர் ஒருவர் தன்னுடைய காதலை நிரூபிக்க தன்னை தானே சுட்டுக்கொண்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவராக இருப்பவர் அதுல். 30 வயதான இவர், தன்னுடைய தோழி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
ஆனால், இருவரின் திருமணத்துக்கு பெண்ணின் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. பெண்ணிடம் வீட்டைவிட்டு வந்துவிடு திருணம் செய்து கொள்ளலாம் என ஹண்டே கூறியபோதிலும், தந்தையைவிட்டு வரமுடியாது என அந்தப் பெண் கூறியுள்ளார். இதனால், அடிக்கடி தனது வருங்கால மாமனாரிடம் தனது திருமணத்தை பற்றி அதுல் லோக்ஹண்டே பேசியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 3-ம் தேதி தனது காதல், திருமணம் குறித்துப் பேசியபோது, பெண்ணின் தந்தை, ‘உன் காதல் உண்மைதான் என்பதை நிரூபி’ எனக் கேட்டுள்ளார். அதற்குத் தான் என்ன செய்யவேண்டும் கேட்கவே, ‘என் வீட்டுக்கு முன்வந்து துப்பாக்கியால் உன்னை நீயே சுட்டுக்கொண்டு காதலை நிரூபிக்க முடியுமா?’ எனக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகி அதுல், பெண்ணின் வீட்டிற்கு முன் நின்று தன்னை தானே சுட்டுக்கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அதுல் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி உயிர் பிழைத்தாலும், மூளைச்சாவு நிலைக்குச் சென்றார். மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சை அளித்தும் அவர் மூளைச்சாவு நிலைக்குச் செல்வதை தடுக்க முடியவில்லை.
என் உடல் உறுப்புகளை என் காதலியிடம் காண்பித்து தானம் செய்துவிடுங்கள் என உருக்கமாக தெரிவித்தார். அதுலின் ஆசைப்படி உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
அதுலின் இதயத்தையும், கண், உடல் உறுப்புகளையும் பார்த்த அவரின் காதலியும், தந்தையும் கண்ணீர்விட்டு அழுது, கதறினார்கள். மற்ற உடல் உறுப்புகள் போபாலில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டது.
சினிமாவில் வரும் துயரமான காதல் காட்சிகள் போன்று அதுல் லோக்ஹண்டேவின் காதல் அமைந்துவிட்டது.