கென்யாவில் சொந்த சகோதரியை அண்ணன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காமேகா மாகாணத்தில் அமைந்துள்ளது முகை கிராமம். இங்கு வசிக்கும் ஒரு குடும்பத்தில் உள்ள அண்ணன், தங்கை இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து யாருக்கும் தெரியாமல் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த விடயம் தற்போது இவர்களின் குடும்பத்தினருக்கும், ஊராருக்கும் தெரியவந்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அண்ணனும், தங்கையும் திருமணம் செய்து கொண்டதால் ஊருக்கு தீங்கு ஏற்படும் என எண்ணிய ஊர் தலைவர்கள் சில சடங்குகளை செய்தார்கள். இதோடு திருமணம் செய்து கொண்ட அண்ணன், தங்கையை கட்டி போட்டு பிரம்படி கொடுத்தார்கள்.
இப்படி செய்தால் தான் தலைமுறை சாபம் தங்களை தாக்காது என கிராம மக்கள் கருதுகிறார்கள், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.