சேலம்….

கள்ள காதலிக்காக, முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாக அவரின் மருமகள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் காவல்துறை டிஜிபி ஆக இருந்து ஓய்வு பெற்றவர் திலகவதி ஐபிஎஸ். இவரது மகன் பிரபு திலக், இவர் மருத்துவர் ஆவார், அரியலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார், இவரது மனைவி சுருதி சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று தனது கணவர் திலக் மற்றும் மாமியார் திலகவதி ஐபிஎஸ் (ஓய்வு) மீது புகார் ஒன்று கொடுத்தார். அந்த புகாரில் கூறி இருக்கும் விவரம் பின்வருமாறு:-

எனது பெயர் சுருதி (42) கடந்த 2007ஆம் ஆண்டு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி மகன், மருத்துவர் பிரபு திலக்கிற்கும் எனக்கும் சேலத்தில் திருமணம் நடந்தது எங்கள் இருவருக்கும் 14 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். திருமணம் ஆனது முதல் சிறிது காலம் மகிழ்ச்சியாக இருந்தோம், ஆனால் ஒரு சில மாதங்களுக்குப் பிறகு என் கணவர் தன் உண்மை முகத்தை காட்ட ஆரம்பித்தார். அன்று முதல் இன்று வரை எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

கணவர் என்னை அடிக்கடி அடித்து கொடுமை படுத்தி வருகிறார், எனது இரண்டு குழந்தைகளுக்காக இதுநாள்வரை நான் பொறுமையாக இருந்தேன், எனது திருமணத்திற்கு எனது தந்தை 170 பவுன் நகையும், ரூ. 1 கோடி ரொக்கமும் கொடுத்தார்.

ஆனாலும் என் கணவர் மது அருந்திவிட்டு வந்து என்னை அடித்து சித்ரவதை செய்து வருகிறார், அடிக்கடி வரதட்சணை கேட்டு துன்புறுத்துகிறார். அவரின் அம்மா, எனது மாமியார் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி என்பதால் உங்களை அழித்து விடுவேன் என் கணவர் என்னை அடித்து மிரட்டி வருகிறார்.

இதுமட்டுமின்றி, அவர் பணியாற்றும் கல்லூரியில் பெண் டாக்டர் ஒருவர் உடன் தொடர்பில் இருந்து வருகிறார், அவர்கள் நெருங்கி பழகி வருவதை தட்டிக் கேட்டதால் கணவர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்,

என் கணவர் மற்றும் அவரது காதலியால் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது, தயவு செய்து எனது உயிருக்கு பாதுகாப்பு கொடுங்கள் என சுருதி கண்ணீர் மல்க அந்த புகாரில் கூறியுள்ளார்.

முன்னாள் டிஜிபி திலகவதி ஐபிஎஸ் மகன் மீது மருமகள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.