விருதுநகர்…

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆவியூர் குரண்டி பகுதியை சேர்ந்தவர் முத்து(48).

இவர் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பொருளாதார பிரிவு பேராசிரியராக பணி புரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மதுரை சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கிய முத்து இன்று காலை அறையை காலி செய்யும் நேரம் முடிந்தும் வெளியே வராததால் விடுதி ஊழியர்கள் சென்று பார்த்தபோது அறைகதவு பூட்டப்படாமல் இருந்துள்ளது.

கதவை தட்டி பார்த்து எந்த பதிலும் இல்லாததால் உள்ளே சென்று பார்த்தபோது முத்து வாந்தி எடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நகர் காவல்துறையினர் உயிரிழந்து கிடந்த பேராசிரியர் முத்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பேராசிரியர் முத்து தங்கி இருந்த அறையில் காலி மது பாட்டிலும் மாத்திரைளையும் கிடந்தன.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நகர் காவல்துறையினர் பேராசிரியர் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.