சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தன்னுடைய கருத்துகளை தமிழில் பதிவிட்டு தமிழர்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றவர் ஹர்பஜன் சிங்.
இந்நிலையில் இன்று தந்தையர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள ட்விட் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
தந்தையை தெய்வமாகவும், ஈடு இணை இல்லாத அற்புதமாகவும் அவர் புகழ்ந்துள்ளது பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.