தமிழ் இளைஞனை கரம் பிடித்த போலந்து பெண் : அம்மி மிதித்து நடந்த கோலாகல திருமணம்!!

1185

தமிழகத்தில்..

போலந்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் மோத்தி கிருஷ்ணன். தமிழகத்தைச் சேர்ந்த இவர், போலந்து பெண்ணான மார்த்தா அன்னா ரோசல்ஸ்காவை காதலித்து வந்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த ஜோடி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவிக்கவே, சென்னையில் தமிழ் கலாச்சார முறைப்படி மோத்தி கிருஷ்ணன் – ரோசல்ஸ்கா திருமணம் நடந்தது.

வெளிநாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ் கலாச்சாரத்தின்படி திருமணம் செய்துகொள்ள ரோசல்ஸ்கா விரும்பியுள்ளார். அவரின் விருப்பப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து மாப்பிள்ளை மோத்தி கிருஷ்ணன் தாலி காட்டினார்.

தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடந்த இந்த திருமணத்தில் கலந்துகொண்ட ஏராளமான உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.