திடீரென தீ பற்றிய ஆம்புலன்ஸ்

துருக்கியில் வேகமாக சென்ற கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் திடீரென ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மூன்று மாத கைக்குழந்தை உடல்கருகி இறந்துள்ளது.

துருக்கியில் உடல்நிலை சரியில்லாத Necmiye S என்கிற தாய் மற்றும் அவருடைய மூன்று மாத கைக்குழந்தை Rojin ஆகியோர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்துள்ளனர்.

அப்போது திடீரென ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறி தீப்பற்றியுள்ளது. இதிலிருந்து தப்புவதற்காக, Necmiye உட்பட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூன்று பேர் வேகமாக வாகனத்திலிருந்து இறங்கியுள்ளனர்.

அப்பொழுது தான் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த குழந்தை தங்களுடன் இல்லை என்பதை கவனித்துள்ளனர். தீயின் வேகம் அதிகமாக இருந்ததால், Necmiye-வின் கண்முன்னே அவருடைய குழந்தை உடல்கருகி இறந்துள்ளது.

இதற்கிடையில் மற்றொரு ஆம்புலன்ஸ் வாகனம் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, Necmiye மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் Necmiye-யிடம் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.